சிலம்பாட்டம் This My New 3 min Video Please Watch And Share Your Friends

0 comments:

Israel Devakani PHOTOGRAPHY





Israel Photography

0 comments:

City To Village Tamil Short Film Dr.Nainar Editing Israel

0 comments:

அஜித்தின் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் மிகப் பெரும் தொகைக்கு தல 57 படத்தை வாங்கியுள்ளதாம் ஜாஸ் சினிமாஸ்.

சென்னை: அஜித்தின் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தல 57 படம் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது.

பின்னர் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது. இப்படம் தொடர்பான அஜீத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்தான் வாங்கியுள்ளதாம். அதுவும் அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை விட மிக அதிக விலைக்கு இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ். இச்செய்தியின் அடிப்படையில்தான் சசிகலாவை போயஸ் கார்டனுக்கு போய் அஜித் பார்த்தார் என்ற செய்தி பரவியிருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.


0 comments:

கனடாவைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் உலகின் மிக ஆழமான கடற்பகுதியா
ன மேற்குப் பசிபிக்கில் உள்ள மரியானா அகழியின் அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்.




ஜேம்ஸ் கேமரன்

மரியானா அகழி
டீப்சீ காலஞ்சர் (Deepsea Challenger) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் 11 கிமீ ஆழத்தைச் செல்லுவதற்கு இவருக்கு 2 மணித்தியாலத்திற்கும் அதிகம் பிடித்திருக்கிறது. இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 07:52 மணிக்கு மரியானா அகழியின் ஆழத்தை இவர் அடைந்தார். மூன்று மணி நேரம் கடல் நிலத்தை ஆராய்ந்து விட்டு கேமரன் மேலே திரும்பினார். படம்பிடிக்கும் கருவிகள், மற்றும் விளக்குகளுடன் சென்ற அவர் நிலத்தை விரிவாக ஆராய்ந்து காணொளிப் படங்களும் எடுத்து வந்துள்ளார். இவற்றை வைத்து ஆவணப் படம் ஒன்றை வெளியிடுவதற்கு இவர் திட்டமிட்டுள்ளார்.


பெருங்கடலின் மிக ஆழமான பகுதியை மனிதர் அடைவது இது இரண்டாவது தடவையாகும். 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த லெப். டொன் வால்சு, மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெருங்கடல் குறிப்பு வல்லுநர் சாக் பிக்கார்ட் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்கள் 20 நிமிடங்கள் கடல் ஆழத்தில் கழித்தனர்.


டீப்சீ சாலஞ்சர் கப்பல் ஆத்திரேலியாவில் நிர்மாணிக்கப்பட்டது. இது 11 தொன் நிறையும், 7 மீட்டர் நீளமும் கொண்டது. கடலடியில் 1,000 வளிமண்டல அமுக்கத்தைச் சமாளிப்பதற்காக தடித்த எஃகினால் ஆன சிறிய அறை ஒன்றில் ஜேம்ஸ் கேமரன் தங்கியிருந்தார். கடலடியில் இருந்து பாறைகளையும், மண்களையும் சேகரிக்க தானியங்கிகளும் கப்பலில் இணைக்கப்பட்டிருந்தன.


1995 ஆம் ஆண்டில் சப்பானி கைக்கோ என்ற ஆளில்லா கப்பல் மரியானா அகழிக்குச் சென்று திரும்பியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நீரியசு என்ற ஆளில்லா கப்பலும் சென்று திரும்பியிருந்தது.


10,924 மீட்டர்கள் ஆழமான மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கில் குவாமுக்கு அருகில் அமைந்துள்ளது. Edited By Israel March 2012

2 comments:

தமிழ் கவிதைகள்




0 comments:

சுப்ரமணிய பாரதியார் - Edited by Israel

சுப்ரமணிய பாரதியார்
எழுத்தாளர்


சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

Edited By Israel Devakani B.sc

0 comments:









0 comments:






0 comments:

This My Visiting Card 

0 comments:

My New Logo How Is It


0 comments:

சீமான்!

சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராகவும், நடிகராகவும் மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர், தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்ட அன்பினாலும், தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி’, ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.
‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர் குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோது தம் உயிரைப் பற்றி எண்ணாமல், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டு வந்தார். ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேடை மேடையாய் சென்று முழங்கினார். விளைவு.? பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
கனடாவில் சென்று முழங்கிய போது அந்நாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இனல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி, மதங்களை கடந்த இவர், “தமிழினத் துரோகிகளை” வெளிச்சம் போட்டு காட்டினார். தன இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார்.”இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க, தன் இனத்திற்கென ஒரு கட்சி இருந்திருந்தால், தமிழினப்படுகொலையையும்,தடுத்திருக்கலாம்! தமிழீழமும் மலர்ந்திருக்கும்! என்றெண்ணி, தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில், புலிக்கொடியேந்தி, “நாம் தமிழர்” கட்சியை துவங்கினார்.
“இருப்பாய் தமிழா! நெருப்பாய்!!” என தமிழர்களை தட்டி எழுப்பினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை நிர்வாணப்படுத்தி, உடைமைகளை சேதப்படுத்தி, அடித்து உதைத்து, நாளும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களன். வேதாரணியத்தில் செல்லப்பன் என்ற மீனவர் இதேபோல படுகொலை செய்யப்பட்டார். “என் சகோதரனை எப்படிடா அடிப்பாய்….? என் தமிழ்ச் சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே…? இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் , சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழ்ப்புலியாய் சீறினார். விளைவு..? மீண்டும் ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’. 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு, நீதிபதிகளாலே ‘சீமான் பேசியதில் தவறில்லை’ என இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு , வெளியே வந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு கட்சி நின்ற 63 தொகுதிகளிலும் தம் இனத்தை அழித்த காங்கிரசை எதிர்த்து பரப்புரை செய்தார்.பரப்புரைகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோதும், வட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டும், பரப்புரையின் போதும் உண்டியல் ஏந்தியும் பரப்புரை மேற்கொண்டார்கள், சீமானும், அவரது தம்பிகளும். இறுதியில், தமிழகத்தில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசு வெற்றி(?) பெற முடிந்தது. காங்கிரசு வெற்றி பெற்ற தொகுதிகள், சீமான் பரப்புரைக்கு போக முடியாத தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசு தமிழகத்திலே மண்ணை கவ்வியதால், காங்கிரசுக்கு தலைவலியாகவுள்ள சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென, சிலர், காசு கொடுத்து சீமானுக்கு எதிராக பாலியல் புகாரும் அளிக்க செய்தார்கள். ‘போர்க்களத்தில் குண்டுகளையும், அரசியல் களத்தில் அவதூறுகளையும் சந்திப்பது இயல்பு’ என இவைகளை உதறித்தள்ளினார் .
முல்லைப்பெரியாறு பிரச்னை, 3 தமிழர்களின் உயிர்ப்பிரச்சனை, கூடங்குளம் பிரச்னை என அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுத்து இவரும், இவரது தம்பிகளும் களமாடினார்கள். இவர் பேசுகிற கூட்டங்களில், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடிய போதும், ‘இது எனக்கு கூடுகிற கூட்டமல்ல.! என் அண்ணன் பிரபாகரனுக்கு கூடுகிற கூட்டம்’ என்று முழங்கினார். பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினாலும், இவரை ஊடகங்கள், பெரிதாக காண்பிப்பது இல்லை.கட்சியில் பல கட்டுப்பாடுகள் விதித்தார் சீமான் , அந்த கட்டுப்பாடுகள்,’என்னை தலைவன் என அழைக்கக் கூடாது. சீமான் வாழ்க! என முழக்கம் போடக்கூடாது. கட்சியில், எவருக்கும் துண்டு, மாலை போடக்கூடாது.
மது,புகையிலை பயன்படுத்தக் கூடாது. பெண்களை மதித்து போற்ற வேண்டும்’ என பல நற்கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், கட்சியில் இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, மருத்துவர் பாசறை,வழக்கறிஞர்கள் பாசறை என புரட்சிகரமாக கட்சி நடத்தினார். ‘நான் இந்தியன் அல்ல.! திராவிடன் அல்ல.! தமிழன்.!!’ என்று முழங்கியதன் விளைவாக இவருக்கு கிடைத்த பட்டங்கள், ‘இனத்துரோகி’, தேசத்துரோகி’.
இவர், பணத்தை எதிர்பார்த்திருந்தால் , இவர் திரைத்துறையிலே இருந்து , லட்சம் லட்சமாக சம்பாதித்திருக்க முடியும். இப்படி, வாடகை வீட்டிலே குடியிருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. பதவியை எதிர்பார்த்திருந்தால், எந்த கட்சியிலாவது கொள்கை பரப்பு செயலாளராக போயிருக்க முடியும். இப்படி சிறை செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்காது. இதனையெல்லாம் எதிர்பாராமல் இவர் துடிப்பது, தன் இனத்திற்கு என வலிமையான அரசியல் கட்சியை உருவாக்கத் தானே ஒழிய, தான் ஆட்சிக்கட்டிலிலே அமர அல்ல..!!
அதனால் தான் , அமெரிக்கா, கனடா, பிரான்சு என நாம் தமிழர் கட்சியை சர்வதேச அளவில் முன்னெடுத்தார். இவர் கட்சியில் விரும்புவது, இனத்திற்கும், கட்சிக்கும் உண்மையாக நிற்கிற தம்பிகளைத்தானே ஒழிய, தனக்கு கொடி பிடிக்கிற தம்பிகளை அல்ல.!
இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமும் கூட, இவரைப்பற்றி உண்மைகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு தானே ஒழிய, இவரை பற்றி துதி பாடுவதற்கு அல்ல.! ஏனென்றால், தன் தம்பிகளை சீமான் அப்படி வளர்ப்பதில்லை.!!’ ஏனென்றால், இவர்
தமிழ்த்தேசிய தலைவர் ஏற்றுக்கொண்ட ஒருவர் 

0 comments:

என் உயிர் தமிழ் 

0 comments:

Tamil Short Film Mudiyum

0 comments:

Water Awarness

0 comments:

Kanavu kaanungal

0 comments:

Now You See Me Vs Mangatha Trailer

0 comments:

Na Muthukumar

0 comments:

0 comments:


0 comments:

வரலாற்றுக்கு முந்தைய காலம்[தொகு]

பழைய கற்காலம்[தொகு]

தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது கி.மு 500,000 ஆண்டிலிருந்து கி.மு 3000 ஆண்டு வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது.[1] பழங்கற்காலத்தின் பெரும்பாலான காலகட்டங்களில் இப்பகுதியில், அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகள் அல்லது புல்வெளி சார்ந்த சுற்றுச்சூழலில் அமைந்த ஆற்றுப் பள்ளதாக்குகளுக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதிகளில் மக்கட்தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருந்தது ஆகையால் தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின்வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும்.[2]தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவை கி.மு 300,000 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.[3] தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ்(Homo erectus) இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர்.[4]
50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்ஸ் கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[5] நுண்கற்கள் காலமானது கி.மு 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.[6]

புதிய கற்காலம்[தொகு]

தமிழ்நாட்டில் சுமார் கி.மு 2500 ஆண்டு புதிய கற்காலம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர். பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[7] புதிய கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில், சிறிய, ஏறத்தாழ நிரந்தரமான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மேய்ச்சல் காரணங்களுக்காக அவ்வப்போது அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களை பள்ளங்கள் அல்லது புதைகலங்களில் புதைத்து சடங்குகளை முறையாகச் செய்தனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க தாமிரத்தைப் பயன்படுத்தவும் தொடங்கினர்.

இரும்புக் காலம்[தொகு]

இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது.[8] இடுகாடு நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மற்றும் அவற்றின் வகைகளைக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இரும்புக் கால குடியேற்றங்கள் பரவியதாகத் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளை ஒப்பிடும் போது பெருங்கற்களாலான குடியேற்றங்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.[9]
சுமார் கி.மு 1000 வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான முற்கால ஆதாரங்கள் இடுகாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்களில் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[10] தொடர்ந்து அகழ்வாய்வு சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தொல்லியல் களமாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது.[11][12]
தற்போதைய பொதுவான காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிய குறிப்புகள், கி.மு 300 ஆண்டைச் சேர்ந்த அசோகரின் சாசனத்திலும் கி.மு 150 ஆண்டைச் சேர்ந்த கதிகும்பா கல்வெட்டிலும் (ஓரளவு) கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை வெளியேற்றிய பாண்டிய அரசன் கடுங்கோன் (c.560–590 CE) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது - நீலகண்ட சாத்திரி, தென்னிந்தியாவின் வரலாறு பக்கம் 105, 137

0 comments:

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழர் காலத்தியக் கோவில்தென்னிந்தியாவின் பல்வேறு தீபகற்பகங்களை பத்து மற்றும் பதினோறாம் நூற்றாண்டில் ஒரே நிருவாகத்தின் கீழ் சோழர்கள் இணைத்தனர்.
தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது.
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ2 அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த ஸ்ரீ விஜயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.
வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் தெலுங்குபேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில்ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது

0 comments: